Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சாவூர் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயம்

ஜுலை 30, 2019 12:13

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வடக்கிகோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் வேணி (வயது 20). இவர் தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேணி, வழக்கம்போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன், மாயமான மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். மேலும் பள்ளி- கல்லூரி தோழிகளின் வீடுகளுக்கும் சென்று விசாரித்தார். ஆனால் மகளை பற்றி எந்த துப்பும் இல்லை.

இதனால் அவர் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மகள் வேணியை கண்டுபிடித்து தருமாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள். மேலும் மாணவி வேணி , காதல் விவகாரத்தில் மாயமானாரா? அல்லது வேறெதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
 

தலைப்புச்செய்திகள்